Thursday, October 4, 2012

உடல் உழைப்பு இல்லாமல் சம்பாதிப்பவரா நீங்கள் ?

உங்கள் ஜாதக கட்டத்தில் புதன் உச்சமாக அல்லது ஆட்சியாக உள்ளதா ?




                     லக்னத்திற்கு கேந்திரம் எனப்படும் ஒன்று,நான்கு,ஏழு,பத்து ஆகிய கட்டங்களிலோ அல்லது ஒன்று ஐந்து,ஒன்பது ஆகிய திரி கோணங்களிலோ புதன் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால் அது பஞ்ச மகா புருஷ யோகம் எனப்படும் ஐந்து விதமான யோகங்களில் சிறப்பான ஒன்றாகும். இது  "பத்திர யோகம்" எனப்படும். இந்த பத்திர யோகம் இருந்தால் அவர்களுடைய அறிவுக் கூர்மை பளிச்சிடும். கல்வி கேள்விகளில் மிக சிறப்பாக விளங்குவர். இது மட்டுமன்றி இந்த ஜாதகர்களால் மாமன் மார்களுக்கும், மாமன் வர்க்கத்தாரால் இந்த ஜாதகர்க்கும் பரஸ்பரம் நல்ல உதவியும் வளமான உறவு நிலையும் அமையும் என்பது உறுதி !!  இந்த யோகம் பெற்ற சாதகர்கள் தங்களுடைய வாழ்க்கையில் புத்திசாலித்தனத்தால் மிகுந்த தான ப்ராப்தியை அடைவார் ! இதனால் இந்த சாதகர்கள் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் உடல் உழைப்பு என்பதே இல்லாமல் பொருளாதாரத்தை ஈட்டுவர் என்றும் கூறப்படும். இம்மாதிரி சாதகர்கள் வங்கி, நிதி நிறுவனங்கள், கணக்கு தொடர்பான தொழில்களில் மிக சிறந்து விளங்குவர் என்பது உறுதி. மேலும் இவர்களின் பேச்சாற்றல் மற்றவரால் பிரமிக்க தக்க வகையில் அமையும், நகைச்சுவையாக பேசுவதிலும் வல்லவர்களாக இருப்பார்கள். குறிப்பாக லக்னத்தில் புதன் இருந்தால் அவர்கள் மார்கண்டேயன் மாதிரி என்றும் இளமையுடன் இருப்பார்கள். புகழ் பெற்ற பேச்சாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் புதன் வலுவாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

**********************************************************************************************************


                    

No comments:

Post a Comment